உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை கோயில் கும்பாபிஷேகம்

மானாமதுரை: மானாமதுரை உச்சி மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவிற்காக கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமானது. நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி நடைபெற்று 9:25 மணிக்கு யாக சாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று 9:45 மணிக்கு கோபுர கலசங்களில் நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.தொடர்ந்து உச்சி மாகாளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை உச்சி மாகாளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், பரம்பரை பூஜாரிகள் ராமகிருஷ்ணன் கதிரேசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி