உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

சிவகங்கை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர பிரீமிய தொகை செலுத்தி நவ.15க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 2024- ---2025ம் ஆண்டிற்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவ பயிருக்கான விதைப்பு காலம் செப்டம்பர் முதல் அக்டோபர். இதற்கான பிரீமிய தொகை ஏக்கருக்கு ரூ.451.80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகள் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பிரீமிய தொகையை செலுத்தி காப்பீடு செய்யலாம். நவம்பர் 15 க்குள் காப்பீடு செய்துவிட வேண்டும்.விவசாயிகள் காப்பீடு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் எண்ணுடன் இணைத்த வங்கி புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சரிபார்த்து காப்பீடு செய்யவும். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடு செய்யும் பொருட்டு தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து பயன் அடைய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை