உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை வெயில் துவங்கியது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லை

கோடை வெயில் துவங்கியது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லை

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழல் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கோயம்புத்துார் உள்ளிட்ட நகரங்களுக்கு 70 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். கோடை என்பதால் பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அமர இருக்கையும் இல்லை. சிவகங்கை நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. கோடைகாலம் என்பதால் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் உள்ள சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரத்தை முறையாக பராமரித்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ