டூவீலர் விபத்தில் இளைஞர் பலி
சிவகங்கை; கொல்லங்குடியில் டூவீலரில் சென்ற இளைஞர் மரத்தில் மோதி பலியானார். பெயர் தெரியாத 38 வயது மதிக்க தக்க இளைஞர் நேற்று மதியம் 3:00 மணிக்கு டூவீலரில் சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் சென்றுள்ளார். கொல்லங்குடி தனியார் பள்ளி அருகே செல்லும் போது ரோட்டில் ஓரமாக இருந்த மரத்தின் மீது மோதி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காளையார்கோவில் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.