மேலும் செய்திகள்
போலீஸ்காரரை வெட்டிய இருவர் சுற்றிவளைப்பு
06-Dec-2025
செங்கோட்டை:கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, புளியரை பகுதியில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா மற்றும் செருதானா கிராமங்களில் உள்ள கோழி பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து அம்மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரளா- தமிழக எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம், தமிழக- கேரளா எல்லை பகுதியான புளியரை வாகன சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தற்போது சோதனை சாவடி, அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் கால்நடை உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து பேர் ஒரு குழுவாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் டயர்களில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி அளிக்கப்பட்டு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவையினங்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிகளை கேரளாவில் இறக்கிவிட்டு மீண்டும் தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் சுத்தம் செய்யப்படாமல் வந்தால் அந்த வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது.கலெக்டர் ஆய்வுஇந்நிலையில் தமிழக- கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை புளியரை பகுதியில் பறவை காய்ச்சல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையினை கலெக்டர் கமல்கிஷோர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த வழியாக வரும் வானகங்களுக்கு தடையில்லாமல் தொடர்ந்து கிரிமி நாசினிகளை தெளிக்க வேண்டும். வாத்துக்கள், பறவைகள் கொண்டு வரப்படும் வாகனங்களை அனுமதிக்க கூடாது என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.----------------பாக்ஸ் மேட்டர்...----------------கனிம வள வாகனங்கள்நடவடிக்கை தேவைகேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது.இதற்காக கேரளாவில் இருந்து அதிகளவில் லாரிகள் தமிழகத்திற்கு கனிம வளம் ஏற்றி செல்ல வந்து செல்கின்றன. பறவை காய்ச்சல் பாதிப்பு குறையும் வரை, கனிம வள வாகனங்களை நிறுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
06-Dec-2025