கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
தென்காசி:கணவர் விபத்தில் இறந்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் வேங்கைராஜ் 37. கடந்த ஆண்டு விபத்தில் இறந்தார். அவரது மனைவி சத்யகலா 32, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்டார். அவர், நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யகலா இறந்தார். போலீசார் விசாரித்தனர்.