இளம்பெண் எரித்துக் கொலை
தென்காசி:எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது.தென்காசி மாவட்டம், கொல்லம் --- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்துார் குளம் பகுதியில், 30 வயது பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். எஸ்.பி., அரவிந்த் சம்பவ இடத்தில் விசாரித்தார்.விரலில் மெட்டி இருந்தது. உடல் முழுதும் கரிக்கட்டையான நிலையில், ஒரு கை மட்டும் எரியாமல் இருந்தது. அருகில் மது பாட்டில் கிடந்தது. சம்பவம் குறித்து இலத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.