உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

திருட்டு குறித்து போலீஸ் விசாரணை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வீர சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 34, எம்.சுப்பலாபுரம் விலக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் நிறுவனத்தில் இருந்த சமையல் காஸ் அடுப்பு, 8 இரும்பு பைப்கள் திருடு போய்விட்டது.இது குறித்து கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது திருடியவர்கள் விபரம் தெரியவந்தது.அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், வாய்க்கால்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் மீது முத்துக்குமார் கொடுத்த புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ