உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகள் செயல் விளக்கம்

மாணவிகள் செயல் விளக்கம்

சின்னமனூர்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சுருதி, சிந்துஜா, ஸ்நேகா, சௌந்தர்யா, ஸ்ரீ ஹஸ்தினி, ஸ்ரீஜா, சுடர்விழி, சுந்தரி, சுஷ்மிதா, சுசி கோகிலா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அய்யப்பட்டியில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வாழைக்கு முட்டு கொடுத்தல் பற்றி விளக்கினர். இதை தவிர்க்க வாழைக்கு முட்டு கொடுப்பதுமற்றும் வரப்புகளில் காற்று தடுப்பு மரங்களை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களை விளக்கி கூறினார்கள். விவசாயிகள் சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை