உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே உப்புத் துறையைச் சேர்ந்தவர் சங்கிலி, இவரது முதல் மனைவியின் மகன் மாரியப்பன் 18, நேற்று முன்தினம் இவரது நண்பர்கள் கருப்பசாமி, ஜெயராம் ஆகியோருடன் மயிலாடும்பாறை மூலக்கடை ரோட்டில் தனியார் பள்ளி பின்புறம் உள்ள தோட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.அங்குள்ள அழகுமலை என்பவரின் தோட்டத்தில், வன விலங்குகள் வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் மாரியப்பன் கால் பட்டு அங்கேயே மயங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ