உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழையின்றி குறைகிறது பெரியாறு நீர்மட்டம்

மழையின்றி குறைகிறது பெரியாறு நீர்மட்டம்

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருகிறது.கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து ஆக. 4ல் 131.75 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). அதன்பின் மழை குறைய துவங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வினாடிக்கு 620 கன அடியானது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1555 கன அடி திறக்கப்பட்டுள்ளது.நீர்இருப்பு 4837 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் குறைந்து 130.60 அடியாக இருந்தது. நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் கடுமையான வெப்பம் நிலவியதால் மேலும் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது. தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ