உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜெ., தொகுதியில் வி.ஐ.பி.,க்களாக வலம் வந்தவர்கள் இன்று அ.தி.மு.க., எதிர் வேட்பாளர்களாக வரும் நிலை

ஜெ., தொகுதியில் வி.ஐ.பி.,க்களாக வலம் வந்தவர்கள் இன்று அ.தி.மு.க., எதிர் வேட்பாளர்களாக வரும் நிலை

ஆண்டிபட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., ஆண்டிபட்டியில் போட்டியிட்ட போது வி.ஐ.பி.,க்களாக வலம் வந்தவர்கள் இன்று அ.தி.மு.க.,விற்கு எதிர் வேட்பாளராக களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றபின் பதவி இழந்தார். மறு தீர்ப்புக்குப் பின் 2002ல் ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்வரானார். ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக அப்போது ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பிரதி உபகாரமாக தங்கத்தமிழ்செல்வனை ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி., ஆக்கினார். ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் மாற்றுக் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாமல் தேனி லோக்சபா தொகுதி முழுவதையும் தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் தினகரன் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். ஜெயலலிதாவிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, எம்.பி.,க்கள் ஆன பின் ஆண்டிபட்டி தொகுதிக்குத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொரு கிராமத்திலும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தனர்.ஜெ., தொகுதியின் நேரடி பிரதிநிதிகளாக அ.தி.மு.க.,வின் வி.ஐ.பி.,க்களாக வலம் வந்ததால் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் இவர்களைக் கண்டு அஞ்சும் நிலை இருந்தது.காலச் சூழல், அரசியல் மாற்றங்களால் தற்போது தினகரன் அ.ம.மு.க., சார்பில் பா.ஜ.,கூட்டணியில் தேனி லோக்சபா தொகுதி வேட்பாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.,வேட்பாளராகவும் அ.தி.மு.க., வுக்கு எதிராக தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி