எம்.எல்.ஏ., அலுவலகங்களில் சட்டசபை அவைக்குழு ஆய்வு சட்டசபை அவைக்குழு ஆய்வு
தேனி : தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் சட்டசபை அவைக்குழு தலைவர் பரந்தாமன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் பணிகள் பற்றி அதிகாரிகள் விளக்கினர். கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், மகாராஜன், சட்டசபை குழுவை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), சரவணன் (கலசபாக்கம்), பொன்னுச்சாமி(சேந்தமங்கலம்), ராமலிங்கம்(நாமக்கல்), செந்தில்குமார்(கள்ளக்குறிச்சி), தமிழ்செல்வன்( ஊத்தங்கரை), நல்லதம்பி(கங்கவல்லி), ஜெயசீலன்(கூடலுார்) , ராஜமுத்து (வீரபாண்டி), சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணி, துணைச்செயலாளர் கேளடைநம்பி, எஸ்.பி., சினேஹா பிரியா, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், ஊரக முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு முன் ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகத்தை குழுவினர் ஆய்வு செய்தனர்.