உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.இந்த அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு ஜன. 17ல் நீர் திறப்பு 300 கன அடியாக இருந்தது. நேற்று முன்தினம் நீர் திறப்பு 511 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடியாக மேலும் அதிகரிக்கப் பட்டது. அணை நீர் மட்டம் 138.85 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி).நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 252 கன அடியாக இருந்தது.நீர் இருப்பு 6836 மில்லியன் கன அடியாகும். நீர் திறப்பு அதிகரிப்பால் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 46 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி மூன்று ஜெனரேட்டர்களில் 90 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி