கவுமாரியம்மன் கோயில் திருவிழா அக்னிசட்டி எடுத்து அம்மன் வழிபாடு
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டது. இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூலை 7ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் சிம்மம், ரிஷபம், குதிரை, யானை, அன்னப்பட்சி, புஷ்பம் பல்லக்குகளில் வீதி உலா நடந்தது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்தனர். முக்கிய திருவிழாவான நேற்று அதிகாலை 3:00 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் இரவு வரை ஆயிரக்கணக்கானோர் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். திருவிழா நேற்று நிறைவு பெற்றது. ஜூலை 22ல் மறுபூஜை நடக்கிறது. டி.எஸ்.பி., நல்லு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி, மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.