உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப் பெரியாறு அணைக்கு மழை நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு மழை நீர்வரத்து அதிகரிப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்த அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கடந்தாண்டு டிச. 23ல் 141 அடியை எட்டியது. அதன் பின் மழையின்றி நீர்மட்டம் குறைந்து வந்தது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.95 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 71.2 மி.மீ., பெரியாறில் 49 மி.மீ., மழை பெய்தது. இதனால் 393 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1284 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6357 மில்லியன் கன அடியாகும்.நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டரில் முழு அளவான 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ