உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

வாகனம் மோதி தொழிலாளி பலிதேனி: உப்புக்கோட்டை அருகே உள்ள எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா 38, கட்டட தொழிலாளி. இவர் நேற்று போடேந்திரபுரம் அருகே உள்ள முனிஸ்வரன் கோவில் அருகே விபத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி தேனி மருத்துவக்கல்லுாரிக்கு வீரபாண்டி போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் பற்றி விசாரிக்கின்றனர்.கொலைமிரட்டல்: 7 பேர் மீது வழக்குதேனி: அல்லிநகரம் ஜக்கன்தெரு சிவா 33. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமருக்கும் இடையே கோயில் திருவிழா வரவு, செலவு தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் சிவா வீட்டு முன் நின்று ராமர், இவரது மனைவி செல்வி, மகன்கள் தீனா, சாரதி, மகள் திவ்யா, உறவினர்கள் ராஜ்குமார், ஜெயா ஆகியோர் சிவாவிற்கு கொலைமிரட்டல் விடுத்தனர். சிவா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆடிட்டர் வீட்டில் திருட்டுதேனி: பழனிசெட்டிபட்டி தென்றல்நகரை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜெகதீஷ் 48. இவர் ஜன.,7 ல் குடும்பத்துடன் கோவை சென்றார். இந்நிலையில் ஜன.,11ல் இவரது டிரைவர் சிலம்பரசன் வீட்டிற்கு சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு அறைகளில் பொருட்கள் சிதறி கிடந்தன. ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான சி.சி.டி.வி., காமிரா பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பணம் ரூ. 50ஆயிரம் திருடு போயிருந்தது தெரிந்தது. ஆடிட்டர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மதுபோதையில் மயங்கியவர் பலிதேனி: உசிலம்பட்டி எஸ்.போத்தம்பட்டியை சேர்ந்த கொத்தனார் முத்துப்பாண்டி 28. இவரது மனைவி தங்கபாண்டியம்மாள். இவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர். முத்துப்பாண்டி வீட்டிற்கு செல்லாமல் இருந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தேனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தேனிபழைய பஸ் ஸ்டாண்டில் ஜன., 17 ல் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தகவலறிந்து ஜன.,19ல் மருத்துவமனை வந்த அவரது மனைவி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ