உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தடுப்புச்சுவர் இன்றி விபத்து அபாயம்

தடுப்புச்சுவர் இன்றி விபத்து அபாயம்

போடி : தேனியில் இருந்து போடிக்கு வரும் வழித் தடத்தில் அமைந்துள்ளது போஜன் பார்க். தினந்தோறும் இந்த ரோட்டில் தமிழக, கேரளா செல்லும் வாகனங்களும், தேனியில் இருந்து போடி செல்லும் பஸ்களும் இந்த ரோடு வழியாக வந்து செல்ல வேண்டும்.போடி போஜன் பார்க்கில் இருந்து கட்டபொம்மன் சிலை ரோட்டிற்கு வளைந்து செல்லும் பாதை குறுகலாகவும், சாக்கடை தடுப்புச் சுவர் இல்லாமலும் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் வளைவில் திரும்பும் போது விபத்து ஏற்படுகிறது.பின்னால் வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் முன் குறுகலான பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்புச்சுவர், எச்சரிக்கை போர்டு அமைத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை