உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சின்னமனூர்: சின்னமனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பழமையும் பெருமையும் கொண்டது. பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பதும், பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பதும் சிறப்பாகும் . இந்த கோயிலில் பங்குனியில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்வு நடக்கும். நேற்று முன்தினம் சுதர்சன - ஹோமம் நடைபெற்றது. நேற்று காலை 10 மணியிலிருந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெண் பட்டில் லட்சுமி நாராயணா பெருமாளும், பச்சைப் பட்டில் சீதேவி பூதேவியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். காலை 11:30 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க பெருமாள் - தேவியரின் கழுத்தில் மங்கல நாண் சூடினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சின்னமனூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். செயல் அலுவலர் நதியா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி