உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  துார்வாரப்படாத மந்தை ஓடையால் சுகாதாரக்கேடு

 துார்வாரப்படாத மந்தை ஓடையால் சுகாதாரக்கேடு

போடி: போடி அருகே ராசிங்காபுரம் மந்தை ஓடை தூர்வாராததால் குப்பை தேங்கி சுகாதாரக்கேடு நிலவுகிறது. போடி ஒன்றியம், ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது குளத்துப்பட்டி. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் இருந்து குளத்துப்பட்டி செல்லும் ரோட்டில் மந்தை ஓடை அமைந்து உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாராததால் முட்புதர்கள் சூழ்ந்து மழைநீர் சீராக செல்ல முடியாத நிலையில் குப்பைகளை கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு நிலவுகிறது. இதன் அருகே குடியிருப்புகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. ஓடையில் தேங்கிய கழிவுநீரால் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையால் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மக்களின் சிரமங்களை தவிர்க்க ஓடையை சூழ்ந்துள்ள முட்புதர்கள், தேங்கிய குப்பையை அகற்றி மழைநீர் சீராக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை