மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
04-Oct-2025
கம்பம்:உத்தமபாளையம் அருகே உள்ள உ.புதுாரில் வசிப்பவர் முருகவேல் 45, இவருக்கும் கம்பத்தை சேர்ந்த சுகன்யா தேவி 34, என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 7 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தவர்கள், 3 மாதங்களுக்கு முன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த செப். 15 ல் கம்பத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற சுகன்யாதேவி வீடு திரும்பவில்லை. கணவர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Oct-2025