உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குற்றாலத்தில் சாரல் மழை சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் சாரல் மழை சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் : குற்றாலத்தில் நேற்று விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.கடந்த 3 தினங்களாக குற்றாலம் பகுதியில் மேகம் கருத்து தென்றலுடன் கூடிய மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பரவலாக விழுகிறது. நேற்று விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சற்று கூடியது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மெயின் அருவியில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.மேலும் ஆடிமாதம் தொடங்கும் முன்பே தர்ப்பணம் செய்பவர்களுக்காக புரோகிதர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்