மேலும் செய்திகள்
கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்
04-Nov-2025 | 1
நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது
04-Nov-2025
போலி ஆவண மோசடி: சார்பதிவாளர் மீது வழக்கு
03-Nov-2025
கார் ஓட்டிய 17 வயது மகன் தந்தை கைது
02-Nov-2025 | 2
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை காரம்பாடு கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, ஓடக்கரை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. கரகாட்ட நிகழ்ச்சியின் போது, யார் பெரியவர் என, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், முருகன் மகன்களான மகேஸ்வரன், 47, மதியழகன், 43, மதிராஜன், 37, ஆகியோரை, மற்றொரு தரப்பைச் சேர்ந்த முருகேஸ்வரி மகன்கள் கத்தியால் குத்தினர். மதிராஜன், மதியழகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த மகேஸ்வரன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.முருகேஸ்வரி மகன்கள் லெவின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர். இரு பெண்கள் உட்பட, ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
04-Nov-2025 | 1
04-Nov-2025
03-Nov-2025
02-Nov-2025 | 2