உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அனுமதியின்றி சர்ச் கட்ட எதிர்ப்பு; கோவிலில் மக்கள் போராட்டம்

அனுமதியின்றி சர்ச் கட்ட எதிர்ப்பு; கோவிலில் மக்கள் போராட்டம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே தெற்கு ஏறாந்தையில், 130 ஹிந்து குடும்பங்கள் வசிக்கின்றன. ஒரு குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளனர். அவர்கள் குடும்பத்திற்காக, புதிய சர்ச் கட்டி வருகின்றனர். இதற்கு பெரும்பான்மையான ஹிந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'அந்த குடும்பத்தினர் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு மேற்கொள்ளலாம். அனுமதியின்றி பொது நிலத்தையும் ஆக்கிரமித்து சர்ச் கட்டுகின்றனர். இதனால், மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது' என, அப்பகுதி ஹிந்துக்கள் கூறுகின்றனர்.அனுமதியின்றி சர்ச் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் வளாகத்தில், அப்பகுதியினர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி இருந்தனர். ஊர் பிரமுகர் தனசிங் கூறியதாவது:அந்த குடும்பத்தினர் மாற்று மதத்திற்கு மாறிய பின், ஹிந்து கோவில் விழா நடப்பதற்கு இடையூறு செய்கின்றனர். தற்போது சர்ச் கட்டி வருகின்றனர். சர்ச் கட்ட வருவாய் துறை, போலீஸ் அனுமதி இல்லை. கட்டக்கூடாது என, அதிகாரிகள் கூறி சென்ற பிறகும் பணி தொடர்கிறது.எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இனி இங்கிருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம்; போராட்டத்தை தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

எஸ் ஆர்
ஆக 13, 2024 21:29

இந்துக்களுக்கு தமிழ் நாட்டில் எந்த உரிமையும் கிடையாது. வங்க தேச இந்துக்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூட அனுமதி மறுப்பு. பிஜேபி தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லை. இந்துக்கள் இனிமேலாவது உணர வேண்டும்.


என்றும் இந்தியன்
ஆக 13, 2024 16:36

அரசு சர்ச் கட்ட அனுமதி கொடுக்கவில்லையா அதிசயமாக இருக்கின்றதே


எஸ் எஸ்
ஆக 13, 2024 12:47

இந்த 130 குடும்பங்களில் கணிசமாக மதம் பார்க்காமல் சமீபத்தில் நடந்த லோக் சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போட்டு இருப்பார்கள். அவருக்கு மனசாட்சி இருந்தால் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்த அடாத செயலை நிறுத்த வேண்டும்


Venkatesan
ஆக 13, 2024 10:56

இங்கிருந்து ஒரு வோட்டு கூட விழாது என்று சொல்லி பாருங்கள். சர்ச் வராது.


RAJA68
ஆக 13, 2024 09:21

அது என்ன அனுமதியின்றி கட்டுகிறார்கள் அப்படியானால் அனுமதி பெற்று கட்டிக் கொள்ளலாமா. அங்கே அங்கே சர்ச் கட்டக் கூடாது என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ