சென்னை ஐயப்ப பக்தர் ஆற்றில் மூழ்கி பலி
திருநெல்வேலி:சென்னை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு வேனில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.நேற்று மாலை திருநெல்வேலி -- மதுரை நான்கு வழிச்சாலையில் நாரணம்மாள்புரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். இதில் சென்னை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மகன் சுப்பிரமணி என்ற சுரேஷ் 24, நீரில் மூழ்கி பலியானார். திருநெல்வேலி தீயணைப்பு படையினர் அவரது உடலை மீட்டனர். தாழையூத்து போலீசார் விசாரித்தனர்.