சென்னை, : புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில், குமார் சி.சி., அணி, 51 ரன்கள் வித்தியாசத்தில், ஹாரிங்டன் வாரியஸ் சி.சி., அணியை தோற்கடித்தது.சென்னையில், தீ புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் போட்டிகள் நடக்கின்றன. இவற்றில், ஒன்பது அணிகள் பங்கேற்று, தலா ஒவ்வொரு அணிகளும், எட்டு போட்டிகள் வீதம் 'லீக்' முறையில் மோதி வருகின்றன.சேத்துப்பட்டு எம்.எம்.சி.சி., பள்ளியில் நேற்று நடந்த லீக் போட்டியில், குமார் சி.சி., மற்றும் ஹாரிங்டன் வாரியஸ் சி.சி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குமார் சி.சி., அணி முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 163 ரன்கள் அடித்தது.அணியின் வீரர் ரத்னசபாபதி, 27 பந்துகளில் இரண்டு சிக்சர், எட்டு பவுண்டரி என, 52 ரன்கள் அடித்தார். எதிர் அணியின் வீரர் ராகவ், நான்கு விக்கெட் எடுத்து, 24 ரன்களை கொடுத்தார்.அடுத்து களமிறங்கிய ஹாரிங்டன் வாரியஸ் சி.சி., அணி, 16.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 112 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 51 ரன்கள் வித்தியாசத்தில் குமார் சி.சி., அணி வெற்றி பெற்றது.