உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோழவரத்தில் சத்துணவு ஊழியர் மர்ம மரணம்

சோழவரத்தில் சத்துணவு ஊழியர் மர்ம மரணம்

சோழவரம்:சோழவரம் அடுத்த மாபுஸ்கான்பேட்டையைச் சேர்ந்தவர் சுகந்தி, 47. சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த பின், சோழவரம் அடுத்த ஆத்துார் வி.ஜி.பி., மேடு பகுதியில், ஆண் நபர் ஒருவருடன் வசித்து வந்தார்.நேற்று சுகந்தி, வீட்டின் கழிப்பறையில் துாக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின்படி, சோழவரம் போலீசார் விரைந்து வந்து, சுகந்தி உடலை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை