மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
3 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
3 hour(s) ago
கோவிலில் ரீல்ஸ் எடுத்த மூன்று பெண்கள் மீது புகார்
3 hour(s) ago
திருவள்ளூர் : திருவள்ளூர் 'குரூப் - 4' தேர்வு நுழைவு சீட்டில், லட்சுமாபுரத்திற்கு பதில் லட்சுமிவிலாசபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த குழப்பத்திற்கு கலெக்டர் பிரபுசங்கர் அளித்துள்ள விளக்கம்:திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் - 4' எழுத்து தேர்வு, வரும் 9ம் தேதி முற்பகல் மட்டும் 194 தேர்வு மையங்களில், 58,127 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.இதில், திருவள்ளூர் மாவட்டம், தேர்வு மைய எண்: 2108, திருத்தணி பாலிடெக்னிக் கல்லுாரி கூடம் - 006ல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லுாரி அமைந்துள்ள லட்சுமாபுரம் தேர்வு மையத்தில், 300 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தற்போது வெளியாகி உள்ள குரூப் - 4 நுழைவு சீட்டில், தேர்வு கூடம் - 006, திருத்தணி பாலிடெக்னிக் கல்லுாரி, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை, லட்சுமாபுரம் என்பதற்கு பதிலாக, லட்சுமிவிலாசபுரம் என கிராமத்தின் பெயர் தவறுதலாக வெளியாகியுள்ளது.எனவே, குரூப் - 4 தேர்வு எழுத உள்ளோர், திருத்தணி பாலிடெக்னிக் கல்லுாரி லட்சுமாபுரம் என்பதே சரியான முகவரி. மேலும் விபரங்களுக்கு, 044 -- 2959 7003 மற்றும் 94449 82770 என்ற தேர்வு மையத்தின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago