மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
6 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
6 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
6 hour(s) ago
சென்னை, சென்னையைச் சேர்ந்தவர் குமார் முகமது கலித், 29. இவர் மீது, ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், சிவில் சப்ளை குற்றப்பிரிவு சி.ஐ.டி., போலீசார், கடந்த மூன்று மாதங்களாக தேடி வந்தனர்.இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களின் ஆவணங்களை, அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, குமார் முகமது கலித் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடைய ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சிவில் சப்ளை குற்றப்பிரிவு சி.ஐ.டி., போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது.இதையடுத்து அவரை, விமான நிலைய போலீசில் ஒப்படைத்து, சிவில் சப்ளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், குமார் முகமது கலித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago