உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முட்புதரில் ஆண் சடலம் மீட்பு

முட்புதரில் ஆண் சடலம் மீட்பு

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் முட்புதர்கள் நிறைந்த காலி நிலம் உள்ளது. இங்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கார்த்திகேயன், 32, என்பது தெரிய வந்தது.குடிபோதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை