உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

திருத்தணி: ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி பகுதியில் இருந்து அரசு அனுமதியின்றி ஆற்று மணல் வாகனங்கள் மூலம் திருத்தணி நகருக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று திருத்தணி போலீசார் தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, நகரி பகுதியில் இருந்து, அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் மடக்கினர். லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடினார். லாரியில், 4 யூனிட் மணல் இருந்தது. இதன் மதிப்பு, 40,000 ரூபாய்.மேலும், திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை