உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தை சேர்ந்தவர் சாரதி, 22. பட்டாக்கத்தியுடன் திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் வீடியோ பதிவு செய்தார்.இது குறித்து திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. நேற்று முன்தினம் இரவு இவர் திருவள்ளூர் --அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை திருவாலங்காடு அடுத்த கூடல்வாடி பேருந்து நிறுத்தத்தில் இருந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 அடி நீளமுள்ள பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ