மேலும் செய்திகள்
இரு கோவில்களில் திருட்டு
13-Feb-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ரோஷா நகர் பகுதியை சேர்ந்தவர் நளன், 45. மாதர்பாக்கம் பஜார் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். அங்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, கேமரா, லென்ஸ் மற்றும் உபகரணங்களை திருடினர். கல்லாவை உடைத்து அதில் வைத்திருந்த, 30,000 ரூபாயை திருடி சென்றனர். வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஸ்டுடியோவில் பதிவான கைரேகைகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
13-Feb-2025