| ADDED : பிப் 15, 2024 01:43 AM
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடைபெறுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகங்களில், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, பொதுப்பணி, வருவாய், ஊரக வளர்ச்சி, மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்.வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த கோட்ட அளவிலான விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களில் பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.