| ADDED : டிச 10, 2025 06:35 AM
திருவள்ளூர்: பெண் குழந்தை வளர்ச்சியில் வீர தீர செயல் புரிந்த, 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு, சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்கு உட்பட்ட, பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தினமான ஜன., 24ல் மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் 13- 18 வயதிற்கு உட்பட்ட, பெண்கள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல் உள்ளிட்டவற்றில், வீர, தீர செயல் புரிந்திருக்க வேண்டும். விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, பாராட்டு பத்திரம், 1 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படும். எனவே, விருது பெற தகுதி உடையோர், https://awards.tn.gov.inஎன்ற இணைய தளத்தில், வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த ஆவணங்களை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.