உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மனைவி ஜோதி, 50. இவர், நெடுங்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் துாய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, மதியம் 2:00 மணியளவில், திடீரென மயங்கி விழுந்தார். உடன், அங்கிருந்தவர்கள் அவரை பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ