உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

திருத்தணி:படவேட்டம்மன் கோவிலில், நேற்று வரலட்சுமி விரதத்தை ஒட்டி, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், நேற்று வரலட்சுமி விரதத்தை ஒட்டி, காலை 7:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் இருந்து, 108 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தவாறு, சன்னதி தெரு, சரவணப்பொய்கை என்கிற திருக்குளத்தை சுற்றி ஊர்வலமாக வந்து, மீண்டும் அம்மன் கோவில் வளாகம் வந்தடைந்தனர். பின், மூலவர் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி மற்றும் மடம் கிராமத்தில் இருந்து, திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். அதே போல், திருத்தணி தணிகாசலம்மன், தணிகை மீனாட்சி அம்மன், காந்திநகர் துர்க்கையம்மன் ஆகிய கோவில்களிலும், ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில், திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை