உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

 சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருவாலங்காடு: புண்டரீகபுரம் நான்கு வழிச்சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளான வியாசபுரம், வீரராகவபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை முறையாக பராமரிப்பதில்லை. இதனால், திருவள்ளூர் - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், சாலை நடுவே உலா வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். சில நேரங்களில் மாடுகள் மீது மோதி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கலெக்டர் பலமுறை அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை