உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மப்பேடில் கூரையின்றி நிழற்குடை 8 ஆண்டுகளாக பயணியர் அவதி

மப்பேடில் கூரையின்றி நிழற்குடை 8 ஆண்டுகளாக பயணியர் அவதி

மப்பேடு, தண்டலம் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு ஊராட்சி. இங்குள்ள காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை, 2013ம் ஆண்டு சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. அதன்பின் பணிகள், 2016ல் நிறைவடைந்தும், எட்டு ஆண்டுகளாகியும் இப்பகுதியில் நிழற்குடை அமைக்கவில்லை.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பயணியர் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்த ஊராட்சி நிர்வாகம் கூரை அமைக்கவில்லை.இதனால், மப்பேடு கூட்டு சாலை பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வெயில், மழையில் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, மப்பேடு பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை