உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி பறிமுதல்

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் அருகே, ரேஷன் அரிசியை சரக்கு வாகனத்தில் ஆந்திராவுக்கு கடத்த இருப்பதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.இதையடுத்து, உடனடியாக சென்ற போலீசார், அந்த பகுதியில் கடத்தலுக்கு தயார் நிலையில் இருந்த, 'டாடா விக்டா' சரக்கு வாகனத்தை கைப்பற்றினர்.அந்த வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். போலீசாரின் சோதனையில், அந்த வாகனத்தில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்ததுதெரிந்தது.வாகனத்துடன் கைப்பற்றிய அரிசியை, பள்ளிப்பட்டு உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடியவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ