உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

சார் - -பதிவாளர் அலுவலகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

திருத்தணி:மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் டத்தோ ராமேஸ்வரி, 59. இவர் நேற்று முன்தினம் திருத்தணி சார்- - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து, தன் உறவினரான திருவள்ளூரை சேர்ந்த காயத்ரி, 38, என்பவருக்கு பொது அதிகாரம் பத்திரப்பதிவு செய்வதற்கு முறையாக டோக்கன் வாங்கினார். இவருக்கு பகல் 12:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, பத்திரம் பதிவு செய்வதற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், இரவு 8:45 மணி ஆகியும் பத்திரப்பதிவு முடிந்து, புதிய ஒரிஜனல் பத்திரம் வழங்காமல் காலம் தாழ்த்தியும், நாளை வருமாறு சார் - -பதிவாளர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி, திடீரென பெட்ரோல் கேனுடன் சார்- - பதிவாளர் அலுவலகம் முன் வந்து போராட்டம் செய்தார். இதனால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ