மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
19 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
19 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
19 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
20 hour(s) ago
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டது பில்லாஞ்சி திடீர் நகர். பில்லாஞ்சி ஏரியின் உபரிநீர் வெளியேற, 15 அடி அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் திடீர் நகர் வழியாக பாய்கிறது. உபரிநீர் கால்வாய் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. தெருவை ஒட்டி பாய்ந்த கால்வாயின் அகலம், தெருவை விட அதிகமாக உள்ளது. கால்வாய்க்கு தடுப்பு சுவர் இன்றி திறந்த நிலையில் உள்ளதால், தெருவில் குழந்தைகள் விளையாடவும் முடியவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் வீசுகிறது. கால்வாய்க்கு மேல்தளம் அமைத்தால், ஓரளவிற்கு நிம்மதி அடைவோம் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த பகுதியில் இருந்து கழிவுநீரை வெளியேற்றவும் தனியே கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago