குரூப்-2 முதன்மை தேர்வுக்கு தாட்கோ இலவச பயிற்சி
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:'தாட்கோ' வாயிலாக, முன்னணி பயிற்சி நிறுவனம் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு, முதன்மை தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 - 32 வயது நிரம்பியோருக்கு, விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவின தொகையும் 'தாட்கோ'வால் வழங்கப்படும்.இந்த இலவச பயிற்சி திட்டத்தில் பங்கேற்க www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.