உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உற்சவர்கள் சந்திப்பு விழா லட்சுமாபுரத்தில் கோலாகலம்

உற்சவர்கள் சந்திப்பு விழா லட்சுமாபுரத்தில் கோலாகலம்

திருத்தணி:திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா தினத்தன்று லட்சுமாபுரம், சொட்டநத்தம் மற்றும் தாசிரெட்டிகண்டிகை ஆகிய மூன்று கிராமத்தில் இருந்து உற்சவர்கள் லட்சுமாபுரம் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.அந்த வகையில், காணும் பொங்கல் விழாவை ஒட்டி, நேற்று இந்த மூன்று கிராமங்களில் இருந்து, மாலை 6:00 மணிக்கு உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் ஆற்றில் எழுந்தருளினர்.அப்போது உற்சவர்கள் சந்திப்பின் போது, வாண வேடிக்கையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், கிராம மக்கள் மற்றும் திருத்தணி பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். பின், உற்சவர் அந்தந்த கிராமத்திற்கு சென்று திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை