உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  செயல் அலுவலர் பணியிடத்தை நிரப்புவது எப்போது?

 செயல் அலுவலர் பணியிடத்தை நிரப்புவது எப்போது?

திருமழிசை: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே திருமழிசை பேரூராட்சி அமைந் துள்ளது. இங்கு, 15 வார் டுகளில் 25,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலராக பணி புரிந்து வந்த வெங்கடேஷ், 60, என்பவர் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் சதீஷ், கூடுதலாக திருமழிசையை கவனித்து வருகிறார். இரு பேரூராட்சிகளையும் கவனித்து வருவதால், வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வருவதால், திருமழிசை மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து, செயல் அலுவலரிடம் தெரிவிக்க முடியாத அவலநிலை நீடிக்கிறது. எனவே, திருமழிசை பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலரை நியமித்து, மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்