உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சிப்காட்டிற்கு பஸ் வசதியின்றி பெண் தொழிலாளர்கள் சிரமம்

 சிப்காட்டிற்கு பஸ் வசதியின்றி பெண் தொழிலாளர்கள் சிரமம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதியின்றி, பெண் தொழிலாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளில், ஒப்பந்த அடிப்படையில், 4,000 பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சிலர் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் நிலையில், பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோ, லாரி என, கிடைக்கும் வாகனங்களில் பணிக்கு வந்து செல்கின்றனர். ஷேர் ஆட்டோவில் குறைந்தது, 20 பெண்கள் வரை பயணிப்பதால், தினமும் மிக பெரிய சவாலுக்கு இடையே பணிக்கு சென்றுவர வேண்டிய நிலையில் உள்ளனர். குடும்ப சுமையை சமாளிக்க வேறு வழி தெரியாமல், ஆபத்தாக பயணிப்பதாக தெரிவிக்கின்றனர். பெண்களுக்கான இலவச பேருந்து வசதியை வழங்கிய தமிழக அரசு, கும்மிடிப்பூண்டி பெண் தொழிலாளர்களுக்கு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை