உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வாலிபர்கள் மோதல்: தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு

 வாலிபர்கள் மோதல்: தடுத்த எஸ்.எஸ்.ஐ., மீது தாக்கு

ஓட்டேரி: ஓட்டேரியில், மது போதையில் இரு வாலிபர்கள் மோதிக்கொள்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. ரோந்து பணியில் இருந்த, ஓட்டேரி சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதர், அங்கு சென்று இருவரையும் சமரசம் செய்ய முயன்றார். அப்போது, ஆத்திரமடைந்த போதை நபர்கள், ஸ்ரீதரின் வலது தோள்பட்டையில் கையால் தாக்கினர். இதையறிந்து, அங்கு வந்த போலீசார், இரு வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அதில், ஓட்டேரியைச் சேர்ந்த சஞ்சய், 20, மற்றும் கைலாஷ், 19, என தெரிந்தது. போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி