உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; நபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; நபருக்கு 20 ஆண்டு சிறை

தூத்துக்குடி : தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 50 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் 50. இவர் 2020ல் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஸ்ரீரங்கனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி