மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் 22ல் நடக்கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மே 21ல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரணை நடக்கிறது.தொடர்ந்து, விசாக திருவிழாவான மே 22ல், அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10:30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.மே 23ல் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025