மேலும் செய்திகள்
இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை
06-Jan-2026
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவின் 8ம் திருவிழாவான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார்.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா பிப்.,14ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 8ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். சிவன் கோயிலை வந்தடைந்த அவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள் மரிக்கொழுந்து மாலை பச்சை பட்டு சாத்தி வழிபட்டனர். 10ம் நாளான நாளை (பிப்.,23) காலையில் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,24 இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. 25ம் தேதி 12ம் நாள் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
06-Jan-2026